அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
காலா படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், மகேந்திரன் என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினி கல்லூரி வார்டனாகவும், பிளாஷ்பேக்கில் ராணுவ அதிகாரியாகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. டார்ஜிலிங், குலுமணாலி, வாரணாசி, சென்னை என பல்வேறு பகுதிகளில் நடந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இதை ரஜினிகாந்த் டுவிட்டரில் உறுதி செய்திருக்கிறார். இதுப்பற்றி டுவிட்டரில் ரஜினி பதிவிட்டிருப்பதாவது : பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 15 நாட்களுக்கு முன்பே படப்பிடிப்பை முடித்த கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி. அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
பேட்ட படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது.